Monday, November 4, 2013

ரயிலில் பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டவர் சிக்கினார்!

ரயிலில் பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு, தப்பி செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2ம் திகதி மாத்தறையில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த ரயிலில், கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அரு கில் வைத்து இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று ள்ளது.இதன்போது பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த, 60000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளை யிட்ட நபரொருவர் ரயிலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் காயமடைந்த நிலையில் குறித்த சந்தேகநபரை, கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலியுடன் கல்கமுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.சந்தேகநபர் நேற்று (03) கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com