Monday, November 4, 2013

அடுத்த கட்ட அதிவேக நெடுஞ்சாலை காலி - மாத்தறை! வெகுவிரைவில் திறப்பு!

அடுத்த வருடம் ஜனவரி நடுப்பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் காலி தொடக்கம் மாத்தறை வரையான பாதை திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிர்மல கொதலா வல தெரிவித்தார். காலி தொடக்கம் மாத்தறை வரையான பாதை திறக்கப்படும் அதே தினம் மாத்தறையிலிருந்து ஹம்பந்தோட்டை வரையான அதிவேக நெடுஞ்சாலை யின் வேலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி பின்னதுவயிலிருந்து மாத்தறை கொடகம வரையான பகுதி 35.25 கிலோமீற்றர் தூரத்தை கொண்டதுடன் இமதுவ, கோக்மதுவ மற்றும் கொடகம பிரதேசங்களில் நுழைவாயில்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலையின் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதுடன் இரண்டு ஓரங்களிலும் வேலி மற்றும் நுழைவாயில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதற்காக 1870 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com