Friday, November 1, 2013

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட தவீஷ லகிது பிரீஸின் கொலை தொடர்பில் இருவர் கைது!

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட தவீஷ லகிது பிரீஸின் கொலை சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷெஃபில்ட் ஹெலம் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அவர், பகுதி நேரமாக உணவகமொன்றில் பணியாற்றி வந்த நிலையில் ஷெஃபில்ட் பகுதியில் உணவு விநியோகிக்க சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை இலங்கை இளைஞரின் கொலை சம்பவம் குறித்த விசாரணைகளை நடாத்துவதற்காக தெற்கு யோக்ஷ்யர் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 50ற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தற்போது விசார ணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com