Friday, November 1, 2013

17 வயது காதலியை குத்திவிட்டு தற்கொலை செய்த 18 வயது காதலன்!

இரத்தினபுரி-இரக்குவானை பிரதேசத்தில் உள்ள காதலியின் வீட்டில் வைத்து 18 வயதுடைய காதலன் தனது 17 வய துடைய காதலியை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாலை வேளையில் காதலன் காதலியின் வீட்டுக்கு சென்று கதைத்துக் கொண்டிருந்த சற்று நேரத்தில் கதை முற்றி இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து காதலன் தனது காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய பின் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

படுகாயங்களுக்கு உள்ளான காதலி காவத்தை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன் 18 வயதுடைய காதலன் உயிரிழந்துள்ளார் இந்தச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com