Saturday, November 2, 2013

சாராய பாரில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வீடுவரை சென்றதில் வாள்வெட்டுக்கு இலக்காகி பெண்கள் உட்பட அறுவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் மதுபான சாலை ஒன்றில் இடம் பெற்ற வாய் தர்க்கம் சண்டையாக மாறி வீடு வரை சென்றது. இதனால் பெண்கள் உட்பட ஆறு பேர் காயம் அடைந்து வைத்திய சாலையில் அனுமதி பெற்றுள்ளனர்.

சாவகச்சேரி நகரிலுள்ள மதுபானசாலையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, நண்பர்கள் குழாத்திடையே பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் அடிதடியாகமாறியுள்ளது. இதன் போது இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், காயமடைந்த இளைஞனின் நண்பர்கள் ஆத்திரமடைந்து உருக் கொண்டவர்கள் போல் பிற்பகல் 5.30 மணியளவில் தாக்குதலை மேற்கொண்டவர்களின் பகுதியான கச்சாய் முருகமூர்த்தி கோவிலடி பகுதிக் சென்றுள்ளனர். அங்கு இரு குழுக்களுக்குமிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் பெண்கள் உட்பட ஜவர் காயமடைந்தனர்.

இவர்கள் ஐவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவத்தில், பாலச்சந்திரன் கஜன்(30), அருனந்தி குகதாஸ்(33), சொக்கலிங்கம் கஜன்(23), செல்வராசா அரவிந்தன்(30), உதயச்சந்திரிக்கா (58), பாலசுப்பிரமணியம் செல்வரஞ்சன்(29) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com