Saturday, November 2, 2013

பறக்கும் விமானத்தில் குழந்தை பிரசவித்த இலங்கைப் பணிப்பெண்!

டுபாயிலிந்து கட்டுநாயக்க நோக்கிப் பயணம் செய்த எயார் அரேபியா விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவர் குழந்தை பிரசவித் துள்ளார்.

விமானம் புறப்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் கர்ப்பிணிப் பெண் பிரசவ வேதனையால் அவதியுற்றதால் விமானத்தை உடனடியாக அருகாமையில் இருக்கும் விமான நிலையமொன்றில் விமானத்தை தரையிறக்கி அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டடிருந்த போதும் விமானம் தரையிறக்கப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே குறித்த பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

டுபாயில் பணியாற்றி வந்த இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார்.

இதனை அடுத்து ஒமான் விமானநிலையத்தில் விமானத்தை தரையிறக்கி தாயையும், சேயையும் ஓமான் வைத்தியசாலையில் அனுமதித்த விமானப் பணியாளர்கள் மீண்டும் இலங்கை நோக்கியப் பயணத்தைத் தெடர்ந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com