Thursday, November 21, 2013

ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் வேலை வருகின்றது !!

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணச்சீட்டுக் களை சோதனையிடுவதற்கு ஓய்வு பெற்ற பொலிஸ் அதி காரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் திடீர் நடமாடும் பிரிவில் இவ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இவர்கள் நாடெங்கும் சேவையில் ஈடுபடும் இ.போ.பஸ் களில் பயணச்சீட்டுக்களை சோதனையிடும் பணியில் ஈடு படுவார்கள். அமைச்சர் குமார வெல்கமவின் யோசனைக்கு அமைவாக ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப் படவுள்ளன.

இவ் அதிகாரிகள் தமது கடமையில் பெற்ற அனுபவங்கள் இப்பணிக்கு உதவியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையடுத்தே இவ்வாறு ஓய்வு பெற்ற அதிகாரிகளை இப்பணியில் ஈடுபடுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமை ச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  November 21, 2013 at 8:03 PM  

How you would solve the unemployment problem of the country.Retired pesonnel they get a pension.The youngsters those who face the unemployment probem are to be considered.If you ignore you may face the mounting difficulties of the young men and women of the country.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com