Saturday, November 30, 2013

க.பொ.த சா/த மாணவர்களுக்காக ஆட்பதிவு திணைக்களம் சனியன்றும் திறப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பொருட்டு, ஆட்பதிவுத் திணைக்களம் விடுமுறை நாளான எதிர்வரும் 7ம் திகதி சனிக்கிழமையும் திறந்திருக்கும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் சரத்குமார தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்திற்கான க.பொ.த சாஃத பரீட்சைகள் டிசம்பர் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளநிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுவதனை அடுத்தே சனிக்கிழமையும் ஆட்பதிவு திணைக்களத்தை திறந்து மாணவர்களுக்கு சேவை புரிய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com