Sunday, November 3, 2013

யாழ்ப்பாணத்தில் வீடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபடவில்லை: இராணுவப் பேச்சாளர்!

யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் முயற்சிகளிலோ அல்லது, வீடுகளை அழிக்கும் செயற்பாடுக ளிலோ தாங்கள் ஈடுபடவில்லை என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வர்ணகுளசூரிய தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கும் குற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரி வித்தார்.

இராணுவத்தினர் சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும், தமிழ் மக்களின் குடியிறுப்புகளை அழித்து வருவதாகவும், ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்தன. எனினும் இராணுவத்தினர் அவ்வாறான செயற்பாடுகள் எவற்றிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தார்.

மேலும் இராணுவ முகாமின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலேயே நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வர்ணகுளசூரிய குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com