Saturday, November 2, 2013

போலி திருமணம் செய்ய முயன்ற இலங்கையரை நாடு கடத்தியது பிரித்தானியா!

பிரித்தானியாவில் போலித் திருமணம் செய்ய முயன்ற இலங்கைப் பிரஜை ஒருவரை பிரித்தானிய அதிகாரிகள் கைது செய்ததுடன், அவரை பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தியுள்ளனர். குறித்த நபர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 21 வயதான பெண்ணொருவரையே போலியாக திருமணம் செய்ய முயன்ற வேளையிலேயே கைது செய்யப்பட்டு ள்ளார்.

இது தொடர்பில் அந்தப் பெண் பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படு த்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் விசாரணைகளில் குறித்த இலங்கைப் பிரஜை அந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com