Saturday, November 2, 2013

இசைப்பிரியா தொடர்பில் சனல் 4 வெளியிட்ட காணொளிக்கு முழுவிளக்கம் கொடுக்கின்றார் வணிகசூரிய!

எல்.ரி.ரி.ஈ அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற 27 வயதுடைய பெண் இலங்கை இராணுவத்தினர் உயிருடன் பிடித்த பின்னரே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதாக சேனல் 4 புதிதாக வெளியி ட்டுள்ள காணொளிச் செய்தியை இலங்கை இராணுவம் மறுத்துள்ளதுடன் சனல் 4 காணொளி ஒரு நாடகம் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார்.

அத்துடன் இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம் எனவும் அடிப் படையற்றக் குற்றச்சாட்டுக்கள் அவை. இசைப்பிரியா என்பவர் விடுதலைப் புலிகளின் ஆயுதப்பயிற்சி பெற்ற லெப்டினன் கர்ணல் தரத்திலுள்ள போராளி. புலிகளின் தொலைக்காட்சியிலும் தீவிரமாக இயங்கியவர் என்று எங்களுக்குத் தெரியும். ஒருபோதும் அவரோ வேறுயாருமோ உயிரோடு பிடிபடவில்லை. நாங்கள் உயிரோடு பிடித்த 12 ஆயிரம் பேர் வரையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். ஒருபோதும் இசைப்பிரியா அவர்களுடன் இருக்கவில்லை´ என இலங்கை இராணுவப் பேச்சாளர் தெரிவித் துள்ளார்.

ஆனால், இசைப்பிரியா இராணுவத்திடம் உயிருடன் பிடிபடுகின்ற காட்சியையும் பின்னர் அவர் கொல்லப்பட்டிருக்கின்ற காட்சியையும் காட்டுவதாக சனல் 4 வீடியோ கூறுகிறதே என்று அவரிடம் மீண்டும் கேட்டபோது, அந்த வீடியோ உண்மையானதா என்று நிபுணர்கள் தான் ஆராய்ந்து உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் சொல்லுகின்ற வீடியோவில் அந்தப் பெண்ணைத் தான் காட்டுகிறார்களா அல்லது யாரையாவது நடிக்க வைத்திருக்கிறார்களா என்று எங்களுக்கு தெரியவில்லை. இது நடிப்பாகக் கூட இருக்கலாம். இந்த வீடியோவை தொழிநுட்ப ரீதியில் ஆராய்ந்துபார்க்க வேண்டும். இந்த வீடியோ ஒரு நாடகம் என்றுதான் நாங்கள் கருதுகிறோம் என ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இவ்வாறான வீடியோ காட்சிகளை சேனல் 4 வெளியிட் டிருந்தபோது, அவை உண்மையானவை தான் என்று சுயாதீனமான நிபுணர்களை மேற்கோள்காட்டி சேனல் 4 கூறியிருந்தது தானே என்று கேட்டபோது, அவை பொய்யானவை என்றும் வேறு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் வாதிட்டார். அத்துடன் சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உண்மையில் இந்தப் பிரச்சனை பற்றி தெரிந்துகொள்ளும் தேவை இருந்தால், இலங்கைக்கு வந்து அவர்கள் அதிகாரிகளின் கவனத்துக்கு அவற்றைக் கொண்டுவர முடியும் என்றும் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

சேனல் 4 இந்த வீடியோவை காமன்வெல்த் மாநாட்டை இலக்கு வைத்துதான் வெளியிட்டிருக்கிறது. நீங்கள் பொறுமையோடு இருந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் இன்னும் ஒரு வீடியோவோ நிழற்படமோ வெளியாகலாம். அது தான் சேனல் 4வின் பழக்கம் என்று எல்லோருக்கும் தெரியும் என்று கூறிய இலங்கை இராணுவப் பேச்சாளரிடம், பிரிட்டனிலிருந்து இயங்கும் சேனல் 4 நிறுவனம் எதற்காக இலங்கை அரசாங்கம் மீதோ இராணுவம் மீதோ பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர், ´இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், இலங்கையில் தனிநாடு ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற பிரிவினைவாதிகளின் செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன. யுத்தகாலத்தில் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க பணம் கொடுத்தார்கள். இன்று அவர்கள் அந்தப் பணத்தை இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களுக்காக செலவிடுகிறார்கள். தமிழ் பிரிவினைவாதிகளின் பணத்தின் பிடியில் சேனல் 4வும் சிக்கியிருக்கிறது´ என தெரிவித்துள்ளார்.

10 comments :

ARYA ,  November 2, 2013 at 6:45 AM  

இவர் சொல்வது முற்றிலும் உண்மை, புலிகள் உயிருடன் பிடிபடுவார்களா ? சயனைட் கடிப்பார்கள் என்று தானே கேள்வி பட்டுள்ளோம், அத்துடன் சீமானின் சினிமா துறையினர் இப்படியான படங்களை தயாரிப்பதில் கில்லாடிகள். எப்படியோ புலிகள் உயிருடன் சரணடைந்தால் அவர்களை கொல்லாமல் , கொத்து ரொட்டி பிரியாணி கொடுத்து ராணுவம் உபசரிக்கும் என எண்ணினார்களா ? புலிகள் இந்நாட்டுக்கு செய்த செயல்களுக்கு என்ன கிடைக்கும் என எல்லோருக்கும் தெரியும்.

Anonymous ,  November 2, 2013 at 8:21 AM  

Channel 4 technically advanced professionals and big money makers.

Unknown November 2, 2013 at 9:01 AM  

அன்று சயனைட் கட்டி வீடியோ எடுத்து,புலிகள் எல்லோரும் தற்கொலை போராளிகள் என்று மார் தட்டி மேற்குலகில் வியாபாரம் பண்ணியவர்கள் இன்று மாறி பரிதாபமாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.அதன் முடிவு இது தான் என்று தெரியாதா?
தமிழன் பகுத்தறிவை வளர்க்க வேண்டும்.

Anonymous ,  November 2, 2013 at 12:17 PM  

Channel 4 the best fabricators.,,we have ever seen.

Anonymous ,  November 2, 2013 at 1:12 PM  

This is a vadakkaththa seeman seariel Tv.

Anonymous ,  November 2, 2013 at 4:02 PM  

தலைக்கனம், தன்னலம், ஆணவம், அகங்காரம் கொண்ட தமிழீழ மேதகுவின் பகுத் அறிவிலும், தூர நோக்கற்ற தமிழ் அறிவுகொளுந்துகளின் ஆலோசனையிலும், குறுகிய வட்டத்திலுள்ள புலம்பெயர் கூட்டத்தின் ஆதரவிலும், சுயநலவாத தமிழக அரசியல் கோமாளிகளின் தயவிலும் அரங்கேறிய அடாவடித்தனமான மாயாஜால கூத்துக்களின் பரிதாப விளைவுகள் இவை..

பூநகரி, பரந்தன் என்று இராணுவம் முன்னேறி வரும் போதே, ஆயுந்தகளை ஒரு பொது அமைப்புக்களிடம் ஒப்படைத்து விட்டு மரியாதையாக சரணடைந்திருக்கலாம்.

அதை விட்டு மக்களையும் தப்ப விடாமல், தங்களின் பாதுகாப்பு அரண்களாக பலிகொடுத்து, கடைசியில் காலில் விழுந்து, கும்பிட்டு சரணடைந்து, கொத்து வாங்கி சாவதற்கு ஆலோசனைகள் வழங்கிய மகாமேதைகள் யார்?

ஆரம்ப காலங்களில் இந்தியா வடகிழக்கு மாநில சுய ஆட்சியை ஏற்படுத்த உதவ வந்தது. பின்னர் நோர்வே, யப்பான், அமேரிக்கா, ஐரோப்பா என்று உலகமே சேர்ந்து எமக்கு ஒரு யதார்த்தபூர்வமான தீரவுக்கு உதவ முன்வந்தது.

இப்படியாக பல சந்தர்பங்கள், சாதமான சூழ்நிலைகளை எல்லாம் தட்டிக்கழித்து, உதவ வந்தவர்களுடன் பகையை ஏற்படுத்தியது மட்டுமல்ல, எல்லோருக்கும் சவாலாக சண்டித்தனத்தாலும், அடாவடித்தனத்தாலும், அடக்குமுறைகளாலும் ஒரு மாயாஜால தமிழீழ உலகை ஏற்படுத்தி விடலாம் என்ற மேதகுவின் பித்து பிடித்த சிந்தனைக்கு ஒத்துழைத்து, உடன் போனவர்கள் யார்?

கடைசியில் ஏற்பட்ட இழப்புக்கள், பாதிப்புக்கள், சீரழிவுகள், வடுக்கள் எல்லாம்
மேதகு தலைவர் அவர்களுக்கும், அவர்களின் அடியார்கள், விசுவாசிகள், ஆதரவாளர்களுக்கும் சமர்பணமாகட்டும்.

இனியும் வேண்டாம் முட்டாள் தனம்.

Anonymous ,  November 2, 2013 at 5:53 PM  

If the channel is a true one there are plenty of things which they can bring them to the light.Syrian west backed rebel cut open and eat the heart of dead govt soldier.How the girl medical student was gang raped in a Delhi passenger bus.There are a lot happening in the world.Why do they waste their times in deceiving the entire world in this particular one it is obvious for the money being pumped into their hands.

Anonymous ,  November 2, 2013 at 6:04 PM  

----------ஏற்பட்ட இழப்புக்கள் பாதிப்புக்கள், சீரழிவுகள், வடுக்கள் எல்லாம் மேதகு தலைவர் அவர்களுக்கும், அவர்களின் அடியார்கள், விசுவாசிகள், ஆதரவாளர்களுக்கும் சமர்பணமாகட்டும----------

An Amassing and wonderful comment from a wise person. He should be our real leader in the future.

We missed every single opportunities and rare chances to resolve our problems easily and wisely. All because of our narrow minded selfish Tamils who blindly support the LTTE and praise the psycho leader..

Anonymous ,  November 3, 2013 at 8:37 AM  

In Saudi countries as punishments they cut off the heads in the presence of massive crowd.A young poor underage muslim srilankan girl's head was taken off by the Saudi Government.Entire srilanka even the whole world knew about this most saddest event .Why not this channel make publiciies against these brutal killings.Why not they take this matter to the Geneva convention or UNO assembly.This is considered as the worst human rights violations in the world.They never drop any tears from their eyes.They just turn their blind eyes.It is really hard for us to understand the real differences.

Anonymous ,  November 4, 2013 at 12:21 PM  

C4 documentary film producers could be a challenge to the international peace humility and unity.Better to nip in the bud.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com