Thursday, November 21, 2013

சிறைச்சாலையில் உள்ள பெண்களின் நலன் தொடர்பில் ஐவர் கொண்ட குழு நியமனம்! சிறைச்சாலை அமைச்சர்

இலங்கை சிறைகளில் உள்ள பெண்களின் நலன்கள் தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. இவர்களின் நலன்களை சிறைகளிலும் பாதுகாக்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கஜதீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதல் தடவையாக அமைக்கப்பட்டுள்ள இந்த குழு மூன்று மாதங்களில் பெண்கள் நலன் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்ததும் புதிய நடைமுறை வரும் எனவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com