Thursday, November 28, 2013

வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவர் சடலமாக மீட்பு!

களனி கங்கை, அவிசாவளை – சீதாவாக்கை பாலத்திற்கு கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நேற்று (27) அதிகாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது.பிரதேச மக்களின் தகவல்படி சடலத்தை மீட்ட அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.அவிசாவளையைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவிசாவளை வைத் தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இந்நபர் நேற்று முன் தினம் (26) வைத் தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு ள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com