ஊட்டியில் தேனிலவு கொண்டாடிய யாழ். புது மாப்பிள்ளை நீர்வீழ்ச்சியில் சிக்கி பலி
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் இந்தியாவின் ஊட்டி பிரதேசத்தில் தனது மனைவியுடன் தேனிலவுக்கு சென்று நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற போது கால் தடுமாறி நீரில் விழுந்து சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்த 29 வயதான ரீகன் என்பவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடைபெ்றதுடன் திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காக சென்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கிவிட்டு நேற்று ஊட்டிக்கு வந்தனர் வந்த வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போய் வழுக்கி கால் தடுமாறி கீழே இருந்த தண்ணீரில் விழுந்துள்ளார்.
தண்ணீர் வேகமாக போய்க் கொண்டிருந்ததாலும், சுழல் இருந்ததாலும் அதில் சிக்கிக் கொண்ட ரீகன் உதவி கோரி அலறியதுடன் அவரது மனைவி உள்ளிட்டோரும் உதவி கேட்டு கதறியதுடன் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதற்குள் ரீகன் தண்ணீருக்குள் போய் விட்டதால் தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் தேடியும் ரீகனை கண்டுபிடிக்க முடியாது போக இறுதியில் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ரீகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1 comments :
Very sad news.
Our prayers and condolences go out to his wife and family at this very difficult time.
Post a Comment