Monday, October 28, 2013

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட திருடன் சிக்கினான்!

கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் கடந்த 26ம் திகதி இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடரந்து பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் நேற்று (27.10.2013) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது முறைப்பாட்டாளர் தனது மோட்டார் சைக்கிளை பாரதிபுரம் பகுதியில் நிறுத்தி வைத்துவிட்டு, அருகில் இருந்த உணவு விடுதியொன்றுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளைக் காணவில்லை என பொலிஸ்நிலையத்தில் முறையிட்டார்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதுடன் சந்தேகநபர் இன்று(28.10.2013) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com