சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவுக்கு வலைவீச்சு!
நாத்தாண்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி பயிலும் 13 வயதுடைய சிறுவன் ஒருவரை கடுமையான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பௌத்த பிக்குவை கைது செய்வதற்கான நடவடிக்கையை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பிக்கு, சிறுவன் கல்வி கற்கும் பாடசாலையில் கற்பித்து வருபவர் எனவும் விசேடமாக நடைபெற்ற இருந்த நடனம் மற்றும் சங்கீத போட்டி பயிற்சிக்கு சென்றவேளை சந்தேகநபர், மாணவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி வரையில் சிறுவன் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்தே மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment