Wednesday, October 9, 2013

ஆப்பிள் ஜுஸ் குடிப்பது ஆபத்தாம்….கவனம் கவனம்!!!!

உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் பழங்களில் முதன்மையானது தான் ஆப்பிள் ஏனெனில் ஆப்பிள் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ள என்பதுடன் மருத்துவர்கள் கூட தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று சொல்வார்கள்.

ஆனால் அத்தகைய ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு பதிலாக தீமையைத் தான் விளைவிக்கும்.

எப்போதும் பழங்களை ஜூஸ் போட்டு சாப்பிடுவதை விட, அப்படியே சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற முடியும் அதிலும் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அப்போது அதில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகம் இருப்பதால், ஆப்பிள் ஜூஸை அதிகம் பருகி வந்தால், நீரிழிவு மற்றும் பற்சிதைவு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக ஆப்பிளை அரைத்து, அதனை வடிகட்டி அதன் சாற்றை மட்டும் பருகினால் தான் மிகவும் ஆபத்தானது அதுபற்றி கீழே பார்க்கலாம்.

ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் அதிகம் இருப்பதால், இது உடலில் பல ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் அதாவது கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை தினமும் உட்கொண்டால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் இதற்கு காரணம் ஆப்பிள் ஜூஸில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஆர்செனிக் என்னும் பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளதுமட்டுமின்றி கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், அது உடல் பருமனுக்கு வழிவகுப்பதோடு, நீரிழிவு நோயினையும் ஏற்படுத்துகிறது.

ஆப்பிள் ஜூஸில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால், குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் இதனை விட பாக்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸில் அதிகப்படியான இரசாயங்கள் சேர்ப்பதால், அது உடலின் ஆரோக்கியத்தை இன்னும் அதிகம் பாதிக்கும் எனவே கடைகளில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

ஆப்பிளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், ஆப்பிளை ஜூஸ், ஸ்மூத்தி என்று செய்து குடிக்காமல் அதனை அப்படியே சாப்பிடுங்கள் அதுதான் உடலுக்கு எந்தவிமான பாதிப்பும் அற்றது என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com