Wednesday, October 9, 2013

மலாலா மீது தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்!

கல்வி உரிமை பிரசார கரான மலாலா யுசப்சாயை கொலை செய்யும் திட்டத்தை மீண்டும் புதுப்பித்திருப்பதாக தலிபானின் பாகிஸ்தான் கிளை அறிவித்துள்ளதுடன் மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்தால் அவர் மீது தாக்குதல் நடத்துவது உறுதி என தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது எப்போது எமக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர் மீது தாக்குதல் நடத்துவோம்” என்று தலிபான் பாகிஸ்தான் கிளையான தஹ்ரீக் தலிபான் அமைப்பின் பேச்சாளர் ஷஹிதுல்லாஹ் ஷஹீத் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு கொடுத்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி மலாலா மீது தலிபான் ஆயுததாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தலையில் காயத்திற்குள்ளான அவர் பல மாத சிகிச்சைக்கு பின் சுகம் பெற்றார் ஆனால் அவரது கல்வி உரிமை பிரசாரத்திற்காக வன்றி இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்காகவே தாக்குதல் நடத்தியதாக தலிபான் குறிப்பிட்டுள்ளது.

கடந்த முறை கூட “அவர் பாடசாலை செல்வதற்காக நாம் தாக்குதல் நடத்தவில்லை தலிபான் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவதற்காகவே தாக்குதல் நடத்தினோம்” என்று ஷஹீத் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com