Wednesday, October 9, 2013

வெள்ளைப்பிரம்பு கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு!

எதிர்வரும் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு, வெள்ளைப்பிரம்பு கொடி விற்பனையின் முதலாவது கொடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அணிவிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது இந்நிகழ்வில் விழிப்புலனற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த த சில்வா முதலாவது கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி அச்சங்கத்துக்கு ஒருதொகை நிதியை கையளித்தார் இதனை தொடர்ந்து வெள்ளை பிரம்பு பாதுகாப்புத்தினத்தின் அடையாள வெள்ளைப் பிரம்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமாரன் ஆகியோருடன் இலங்கை விழிப்புலனற்ற பட்டதாரி கள் சங்க அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com