Wednesday, October 9, 2013

யாழ் தேவிக்கான ஆசனப்பதிவுகள் யாழில்!

கிளிநொச்சி கொழும்புக்கான ரயில் போக்குவரத்துக்கான ஆசனப்பதிவுகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கான ஒழுங்குகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளது என ரயில்வே திணைக்களத்தின் பிரதான அதிகாரி த.செந்தில்நாதன் தெரிவித்தார்.

மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து ரயில் பயணத்தை மேற்கொள்ளவுள்ள பயணிகள் கிளிநொச்சி சென்று அவசர அவசரமாக கொழும்புக் செலவதற்கான பயணச் சிட்டைகளைப் பெற முண்டியடிக்கின்றனர் இதனால் இந்தச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக 14 நாள்களுக்கு முன்னதாகவே ஆசனப் பதிவுகளை யாழ்.நகரில் மேற்கொள்ளமுடியும் என தெரிவித்தார்.

இதற்கான பதிவுகளை யாழ். கே.கே.எஸ் வீதியில் உள்ள பிரதம தபாலகத்துக்கு அருகில் உள்ள “மொபிற்றல்’ கிளை அலுவலகத்தில் இதற்காக ரயில் நிலைய உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் எனக்குறிப்பிட்ட அவர் இந்தப் பணிமனை ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாள்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை இயங்கும் எனவே குறித்த நேரகாலத்தில் பயணிகள் ஆசனப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

யாழ். குடாநாட்டை சேர்ந்தவர்கள் இங்குள்ள கருமபீடத்தில் பதிவுகளை செய்து பயணத்தை இலகுபடுத்திக் கொள்ள வசதியாகவே ர்யில்வே திணைக்களம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com