கலகாவில் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் இரு சார்ஜன்கள் மீது பிரதேசவாசிகள் கூரிய ஆயுதங்களால் தாக்குதல்!
கலஹா - புப்புரஸ்ஸ பொலிஸ் சோதனைச் சாவடி பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் மூவர் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஜதலாவ பகுதியில் நேற்று (08) இரவு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரவு நேர பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் ஜீப் மீது ரஜதலாவ பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பின் அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸ் சோதனைச்சாவடி பொறுப்பதிகாரி மற்றும் இரு சார்ஜன்கள் மீது பிரதேசவாசிகள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதன்போது காயமடைந்த மூவரும் கம்பளை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு மோதலில் காயமடைந்த பிரதேசவாசி ஒருவர் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தப்பிச் சென்றுள்ள ஏனைய சந்தேக நபர்களைப்ப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment