Thursday, October 10, 2013

இனப்பிரச்சினை தீர்வில் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தம் – பிரபா கணேசன், எம்பி.

சி. வி. விக்கினேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக சத்தியப் பிமாணம் செய்து கொண்டது வடக்கு கிழக்கு தமிழ் மக்களை நாட்டிலுள்ள வடகிழக்கு தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்திய வம்சாவளி மக்களையும் மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்வது என்பது அரசாங்கத்திடம் மண்டியிடுவதோ உரிமைகளை விட்டுக் கொடுப்பதோ அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது நாட்டில் வாழும் தமிழர்களின் நிலைமைகளைப் புரிந்து கொள்ளாத புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வைகோ போன்றவர்கள் இதனை வன்மையாக கண்டித்துள்ளார்கள். தென்னிலங்கையில் சிங்கள மக்களோடு வாழும் தமிழ் மக்களைப் பற்றி எந்த அறிவும் இவர்களுக்கு இல்லை. தமிழ் கூட்டமைப்பின் இந்த முடிவின் மூலமாக சிங்கள மக்கள் மத்தியிலே இன்று பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்குரிய கொடுக்கப்படாத ஏனைய அதிகாரங்களைக் கூட வழங்கினால் தவறில்லை என்ற மனநிலை இதன் மூலம் சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் இந்த செயல்பாட்டினால் எமது அரசாங்கம் தான் தடுமாறிப் போயுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வினை கொண்டு வரவேண்டும் என்ற அழுத்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் இவ்வாறான இராஜததந்திர செயல்பாடுகள் எதிர்காலத்தில் தொடர வேண்டுமென்றே நான் எதிர்ப்பார்க்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com