Sunday, October 6, 2013

கத்திமுனையில் மடோனா மீது வல்லுறவு!

உலகின் முன்னிலை பொப்பிசைப் பாடகியான மடோனா, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தனது இசை, நடனத்துறை வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காக வந்தபோது கத்திமுனையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக புதிய கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பிறந்தவர் மடோனா. 1978 ஆம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் இசைத்துறை வாழ்க்கை ஆரம்பிக்கும் கனவுடன் அவர் நியூயோர்க் நகருக்கு இடம்பெயர்ந்தார்.

ஆனால், நியூயோர்க் நகரம் தான் எதிர்பார்த்ததைப் போல் இருக்கவில்லை என ஹார்பர்ஸ் பஸார் எனும், சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் மடோனா தெரிவித்துள்ளார்.

'நியூயோர்க் நகரம் என்னை இரு கரம் நீட்டி வரவேற்கவில்லை. அங்கு முதல் வருடத்தில் நான் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டேன். எனது முதுகில் கத்தியை வைத்து உயர்ந்த கட்டடமொன்றின் கூரைக்கு தள்ளிச்செல்லப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டேன். நான் தங்கியிருந்த வீடு 3 தடவை உடைக்கப்பட்டது. எனது வானொலிப் பெட்டியை அவர்கள் கொண்டு சென்றபின் வேறு பெறுமதியான பொருட்கள் எதுவும் என்னிடம் இருக்கவில்லை' என மடோன அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com