Tuesday, September 24, 2013

யாழில் பாடசாலை சென்ற மாணவனை காணவில்லை என பொலிசில் முறைப்பாடு!

யாழ். நிலாவரை மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் 13 வயதான கிருஸ்ணன் சுமணன் என்ற மாண வனை காணவில்லை என பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நிலாவரை வடக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை காலை பாடசாலைக்கு சென்று விடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவன் காணாமல் போனது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com