Tuesday, September 24, 2013

வவுனியாவில் 14 வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்!

வவுனியா பண்டாரிக்குளத்தில் 14 வயதான சிறுமி மூன்று பேர் கொண்ட குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வான் ஒன்றில் சென்ற மூவர் சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதுடன் இந்த நபர்கள் மீண்டும் வவுனியாவின் நகர்ப் பகுதி ஒன்றில் குறித்த சிறுமியை இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

நடு வீதியில் நின்ற சிறுமியை கண்ட பிரதேச வாசிகள் சிறுமியிடம் விசாரணையை மேற்கொண்டபோது சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்ததை தொடரந்து பிரதேசவாசிகள் சிறுமியை வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதித் துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com