Tuesday, September 24, 2013

பிள்ளை நேயப்பாடசாலை தொடர்பான சிறப்பு நிகழ்வுகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள பிள்ளை நேயப் பாடசாலைக் கிடையிருந்து சிறந்த பாடசாலையாக வலயத்தில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அப்பாடசாலைகளுக் கிடையிலான முன்வைப்பு நிகழ்வு சென்ற 14 ஆந் திகதியன்று திருகோணமலை சென்மேரிஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. நிஸாம், ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் பீ. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சம்மாந்துறை கல்வி வலயம் சார்பாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரியும் இந் முன்வைப்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இப்பாட சாலை சார்பாக அதிபர் ரீ.எம். தௌபீக், பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீம், ஆசிரியர்களான எம்.எம். விஜிலி, எம்.எஸ். சிறாஜ்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(ஏ.எம். தாஹாநழீம்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com