Friday, August 23, 2013

நவநீதன் பிள்ளையின் வருகைக்கு எதிர்ப்பைக் காட்ட எத்தனிக்கிறது ராவணா பலய...!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதன் பிள்ளை என்பவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டில் செயற்படும் பணம் படைத்தவர் ஒருவர் என்றும், எல்.ரீ.ரீ யினருக்கு ஆதரவு வழங்கும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவாளர் என்றும், அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவது பற்றி அவருக்குக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்றும் ராவணா பலய அமைப்பு குறிப்பிடுகிறது.

அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ள நவநீதன் பிள்ளையின் இந்நாட்டுச் சுற்றுலாவை முழுமையாக தமது அமைப்பு எதிர்ப்பதாகவும் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் இத்தெகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போன்ற வளர்முக நாடொன்றுக்கு எதிராகச் செயற்படும் அவர், இலங்கைக்கு வந்து இலங்கையை காட்டிக் கொடுப்பதற்கே முயற்சி செய்கின்றார் எனக் குறிப்பிடும் அமைப்பின் பொதுச் செயலாளர், பிள்ளையின் வருகைக்கு எதிராக முழுமையாகச் செயற்பட தமது அமைப்பு ஆவன செய்துவருவதாகவும், பிற தேசங்களுக்கு தலைசாய்த்து அவர்கள் இலங்கையை ஆட்டிப்படைக்க ஒருபோதும் தமது அமைப்பு இடம்கொடுக்காது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com