Friday, April 26, 2013

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 20 லட்சம் ரூபா பணமோசடி செய்த பெண் யாழில் கைது!


வெளிநாடு போவோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ஏனெனில் லண்டனுக்கு சுற்றுலா வீசா மற்றும் கல்வி விசாவில் அனுப்பி வைப்பதாகக் கூறி 20 லட்சம் ரூபா மோசடியில் இடுபட்ட அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று(26.04.2013) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.



குறித்த பெண் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் இவரிடம் பல பண மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்தப்பெண் பலரையும் ஏமாற்றி விட்டு தலைமறைவாக இருந்ததாக குறிப்பிட்ட இவர் நேற்றைய தினம் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளியேறி மீண்டும் அரியாலைக்கு வந்த செய்தியறிந்த பொலிசார் அவரைக்கைது செய்துள்ள

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது தான் இவளவு காலமும் திருகோணமலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக தெரிவித்ததாக குறிப்பிட்ட யாழ்ப்பாண பொலிசார் இவரை இன்றையதினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com