வடக்கு தேர்தல் செப்ரெம்பரில்!
வடக்கு மாகாணசபைத் தேர்தலை செப்ரெம்பரில் நடத்தவுள்ளதாகவும். அதற்காக ஏனைய மாகாணசபைத் தேர்தல்களையும் நாம் பிற்போட்டுள்ளோம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தலை நிறுத்தி வைக்கும் எண்ணம் இல்லை. அதைச் செய்து விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பவில்லை. ஏனைய எட்டு மாகாண சபைகளும் அனுபவிக்கும் அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்களை வடக்கு மாகாணசபை கொண்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment