மாத்தறையில் முஸ்லீம் மாணவிகள் மீது தாக்குதல் ? பொலிஸார் மறுப்பு
மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவிகள் மூவர் இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ள போதும் இக்குற்றச்சாட்டு பொய்யென பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை 5.30 மணியளவில் மாத்தறை திக்வல்லை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று முஸ்லிம் மாணவிகள் மாலைநேர வகுப்புக்கு தனியாக சென்று வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த சிலர் இளைஞர்கள் இவர்களைத் தாக்கியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது அவர்கள் தம்மை அச்சுறுத்தியதாக பொலிஸில் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணை செய்த பொலிஸார் அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment