Tuesday, February 5, 2013

துமிந்த எவ்வாறு விடுதலையாக முடியும்?

லக்ஷ்மன் பிரேசந்திரவின் மகள் வினவுகிறார்...

தனது தந்தையின் வாகன ஓட்டுநராக இருந்த போல சமன் என்பவர் சத்தியக் கடதாசி ஒன்றின் மூலம், முதலில் துப்பாக்கிச் சூட்டு நடத்தியது தனது தந்தை எனக் குறிப்பிடுவது பொய்யென்றும், இவ்வாறு கதைகள் உருவாக்கப்பட்டால் தனது தந்தையின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் துமின்த சில்வா விடுதலையாகிவிடுவார் என்றும் செல்வி ஹிருனிகா பிரேமசந்திர குறிப்பிடுகிறார்.

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட நால்வர் கொலை வழக்கு சம்பந்தமான வழக்கு விசாரணைக்காக வருகை தந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தனது தந்தையின் வாகன ஓட்டுநர் அவ்வாறு செய்யக் காரணம் பண ஆசையேயன்று வேறொன்றுமில்லை என சந்தேகமின்றிக் குறிப்பிட முடியும் என்று குறிப்பிட்ட அவர், முதலில் கொடுத்த வாக்குமூலம் பின்னர் மாற்றமடைவதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com