Saturday, February 16, 2013

சண்டே லீடர் பத்திரிக்கை செய்தியாளர் மீது வீட்டில் வந்து துப்பாக்கி பிரயோகம்- இனந்தெரியாதவர்கள் அட்டகாசம்

இலங்கையின் சண்டே லீடர் ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் மீது துப்பாக்கி சூட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இத்துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நிலையில் குறித்த செய்தியாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். துப்பாக்கி பிரயோகத்தின் போது கழுத்தில் காயமடைந்த நிலையில் அவர் உடனடியாக களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவயிலளார் பர்ஷா சகுல்கெட்டாலி என்பவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது கழுத்தில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பர்ஷா சகுல்கெட்டாலி வீட்டுக்குள் பிரவேசித்த மூன்று இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாரூக், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், உயிராபத்து எதுவும் கிடையாது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com