காதலர் தினத்தில் நாய்களும் மனிதர்களும் முத்தமிட்டால் எப்படியிருக்கும் !!!
எப்பவும் வித்தியாசமாக யோசிக்கும் மனிதன் இப்போது காதலர் தினத்தில் என்ன? செய்தான் தெரியுமா! தொடர்ந்த வாசியுங்கள். காதலர் தினத்தை முன்னிட்டு நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் முத்தமிடும் போட்டி இடம்பெற்றது. இப்போட்டி அமெரிக்க ஒரேகன் மாநிலத்திலுள்ள போர்ட்லான்ட் நகரில் இடம்பெற்றுள்ளது.
அங்கு 9ஆவது வருடமாக இடம்பெற்ற இப்போட்டியில் பியயு என்ற 12 வயது நாய் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நாய் தனது உரிமையாளரான லிண்டா வால்டனை 45.8 செக்கன்கள் தொடர்ந்து முத்தமிட்டுள்ளது.
இதில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சன்னி என்ற நாயும் மூன்றாம் இடத்தைப் பெற்ற டஜன்கோ என்ற நாயும் முறையே 16.8, 11.7 செக்கன்கள் முத்தமிட்டுள்ளன.
0 comments :
Post a Comment