Saturday, February 16, 2013

ஜெனீவாவின் பின்னரே நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம்- இன்னர்சிற்றி

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத்தின் பின்னர் திகதி நிர்மாணிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளதாக இன்டர்சிட்டி எக்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பில் மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு 10 விசேட அறிக்கையாளர்களை அனுப்பும் நோக்கத்தில் அவர் உள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com