Thursday, February 7, 2013

இன்னும் இரண்டு வருடங்களில் நாடெங்கிலும் பாதுகாப்பு கடவைகள்

இலங்கையில் தற்போது பாதுகாப்பற்ற நிலையிலுள்ள 500 புகையிரத கடவைகளுக்கு, புகையிரதக் கடவைகளை பொருத்துவதற்கு புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் ஏற்பட்ட விபத்துகளை கருத்திற்கொண்டு, இத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அமைச்சர் குமார வெல்கம அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது ஏராளமான நாடுகளில் பாதுகாப்பற்ற புகையிரதப் பாதைகளில், பாதுகாப்பு கடவைகள் பொருத்துவதற்கு, முன்வந்துள்ள போதிலும், கேள்விக்கட்டளைகள் மூலம் பொருத்தமான நாடுகள் தெரிவு செய்யப்படவுள்ளன.

மணியொலியும் ஒளிச்சமிக்சை (Bell and Light) முறைமை தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனை மேலும் விரிவுபடுத்துவதற்கு, இத்திட்டம் மூலம் வழியேற்படுமென, ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பீ. ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com