நான் இப்போது சாப்பிட மட்டுந்தான் வாய் திறக்கிறேன் என்கிறார் மர்வின்!
‘நான் இப்போதெல்லாம் சாப்பிட மட்டுந்தான் வாய் திறக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா.
மக்கள் விடுதலை முன்னணி பயங்கரவாதக் காலப் பிரிவில் (88 - 89) பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தபோது திஸ்ஸமகாராமவில் ஊர்வலம் ஒன்றை நடாத்திச் சென்றதால் தன்னுடைய மூன்று சகோதரர்களை உயிர்ப்பலி கொடுக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டிருக்கின்ற அமைச்சர், இந்நிலமையில் சாப்பாட்டுக்க மட்டும் உங்கள் வாயைத் திறவுங்கள் என்று திஸ்ஸமகாராம ரஜமகா விகாராதிபதி மறைந்த ஹக்மன பஞ்சாலோக்க தேரர் தமக்கு அறிவுறுத்தியாகவும், அந்த அறிவுறுத்தல் தற்போதி தனக்கு நினைவு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், தான் எந்தவொரு ஊடகத்துடனும், தனியாருடனும் அதிகம் பேசாமல் வாயைப் பொத்தியிருப்பதாகவும், மறைந்த முன்னாள் விகாராதிபதியின் உபதேசத்தை தற்போது ஏற்றுக்கொண்டு சாப்பாட்டுக்காக மட்டும் வாய் திறப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
1 comments :
இதை வாயால் சொன்னாரா அல்லது எழுதிக்காட்டினாரா ?
Post a Comment