Wednesday, January 23, 2013

உருத்திரகுமாரன் தேசவிரோதி என்கின்றது நெடியவனின் கறுப்பு மீண்டுமொருமுறை.

புலம்பெயர் தேசத்தில் எஞ்சியுள்ள புலிகளின் எச்சசொச்சங்கள், புலிகளின் சொத்துக்களை கையகப்படுத்திக் கொள்வதற்காக தமக்குள்ளே முட்டிமோதிக்கொள்கின்றன. இவை உங்கவீட்டு மோதல் எங்கவீட்டு மோதல் அல்ல அடி , உதை , ஒழிந்திருந்து வாழ்வெட்டு , காடையர்களிடன் கொந்தராத்து , மனைவி பிள்ளைகளுடன் சேர்த்து துரோகிப்பட்டம் அதற்கும் அடங்கவில்லை என்றால் கொலை என நீண்டு செய்கின்றது. அவ்வாறுதான் பாரிசிஸில் பரிதியும் கொல்லப்பட்டார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் மீண்டுமொருமுறை நெடியவன் குழுவினரால் வெளிவிடப்படுகின்ற கறுப்பு எனப்படுகின்ற இதழ் நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் அவர்களை தேசவிரோதி என்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக அமைந்திருப்பது நாடுகடந்த தமிழீழமே என சிலர் இன்று வாய் கிழியக்கத்துகின்றபோது, மறுபுறத்தில் நாங்கள் தான் தேசியத் தலைவரின் நேரடி வழிகாட்டலில் வந்த வாரிசுகள் எங்களுக்கே அனைந்தும் சொந்தம், தலைவரின் ஆணைக்காக காத்திருக்கின்றோம் என்று கூறுகின்ற அணியினர் நாடுகடந்த தமிழீழத்தின் தலைவரை தேசத்துரோகி என்றால் அந்த அமைப்பின் தோற்றம் மற்றும் அதன் செயற்பாடுகள் யாவும் தேசவிரோதம் என்றுதானே அர்த்தம்.

குறிப்பிட்ட கறுப்பு எனும் இதழ் என்ன சொல்கின்றது என்பதனை வாசகர்களுக்கு சிறு எழுத்தும் மாற்றும் செய்யாமல் அப்படியே விட்டு விடுகின்றோம்.

உருத்திராவின் அமைச்சர் பாலாம்பிகைக்கு சங்கீதன் எச்சரிக்கை.


தேசவிரோதி உருத்திரகுமாரனின் மகளிர் விவகார அமைச்சராக விளங்கும் பாலாம்பிகை முருகதாசிற்கு விநாயகம் கும்பலின் பிரித்தானிய இணைப்பாளர் சங்கீதன் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் பிச்சைச் சம்பளத்தில் வாழ்ந்தவாறு மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் சுற்றுலாப்பயணம் செய்து இரவல் பணத்தில் ஒய்யாரக் கொய்யகம் புரிந்த வசந்தன் என்றழைக்கப்படும் சின்னராஜா வசந்தராஜன் என்ற நபர் விநாயகம் குழுவினருக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

முன்னர் தேசிய செயற்பாட்டாளராக விளங்கிய இவர் பின்னர் விநாயகம் கும்பலுடன் இணைந்து தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். எனினும் இவருக்கான கொடுப்பனவுகளை விநாயகம் கும்பல் வழங்க மறுத்ததை அடுத்து அக்கும்பலுக்கு எதிராகத் திரும்பிய இவர், விநாயகம் கும்பலின் குட்டுக்களை அம்பலப்படுத்தி வருவதோடு, உருத்திரகுமாரனின் நாடுகடந்த அரசாங்கத்தின் அமைச்சர் பதவி ஒன்றையும் குறிவைத்து இயங்கி வருகின்றார்.

இதற்காக உருத்திரகுமாரனின் மகளிர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாசுடனும், அவரது கணவரான முருகதாசுடனும் நெருங்கிய தொடர்பை வசந்தன் ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து பாலாம்பிகை முருகதாசை அணுகிய தேசவிரோதி சங்கீதன், வசந்தனுடன் எந்தத் தொடர்பையும் வைத்திருக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதாக அவரது கணவரான முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நாட்களில் பாலாம்பிகையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அனாமதேய நபர் ஒருவர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்தாகவும், இது உருத்திரகுமாரனின் அடிதடி அமைச்சரான தயாபரனின் வேலை என்று தாம் சந்தேகிப்பதாகவும் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் தானும், தனது மனைவியும் அச்சமடைந்திருப்பதோடு, அண்மைக் காலமாக தங்களுடன் தொடர்பு கொள்வதை உருத்திரகுமாரன் தவிர்த்து வருவது இதனையே உறுதி செய்வதாகவும், இதனால் தமது மனைவியின் அமைச்சுப் பதவி பறிபோகக்கூடும் என்றும் முருகதாஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

தெளிவாக வாசிக்க படத்தின் மீது கிளிக் செய்யுங்கள்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com