நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றவர் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு
நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற 22 வயது இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்.நாவாந்துறைப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த மயில்வாகனம் டிலக்ஷன் வயது 22 என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
தரைவைக் கடலை கடந்து செல்ல 5 நண்பர்கள் படகில் சென்றுள்ளனர் இதன்போது கடும் காற்று காரணமாக ஒருவர் தவறி வீழ்ந்து கடலில் அலையில் இழுபட்டுச் சென்று உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இசம்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment