Wednesday, January 23, 2013

கிழக்கு மாகாணத்தில் 25 அதிபர்கள் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோம் செய்துள்ளனர் - மாகாண கல்வியமைச்சர் விமலவீர

கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவிகளைக் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 25 அதிபர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அமர்வு நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் பல்வேறு விதங்களில் மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு சவூதி அரேபியாவில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக் போன்ற எத்தனை பெண் பிள்ளை இலங்கையில் படுகொலைச்செய்யப்படுகின்றனர். என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com