Sunday, December 16, 2012

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி

காரைநகர் கசூரினா கடற்கரையில் குளிப்பதற்கு சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இதில் ஏழலையைச் சேர்ந்த வங்கி ஊழியரான நிதர்ஷன் வயது 21 என்ற இளைஞரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

நண்பர்களோடு குளிப்பதற்காக சென்ற இவர் கடலில் இருந்து ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com