Friday, September 7, 2012

பொன்சேகாவின் பொதுச்செயலாளரும் கைகழுவப்போறார்??

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் திரான் அலஸ் அந்தப் பதவியிலிருந்து விலகிவிட்டதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் கட்சியின் செயலாளர் செயலாளர் விஜித ஹேரத் ஜதேமு-வில் இருந்து விலகவில்லை என்று ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அலஸ் தன்னிஷ்டத்துக்கு நடக்க முடியாது என்று கட்சித் தலைவர் சரத் பொன்சேகா ஒரு சிங்கள பத்திரிகைக்கு அளித்த பேட்டியே இதற்கான காரணம் என்று கூறப்படுகின்றது. எனினும் பேட்டியில் தனது கூற்று திரித்து எழுதப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான முழு அறிக்கை வெளியிடுவதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர ஜனாதிபதியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியவர் திரான் அலஸ். அவர், ஜதேமு பா.ம. உறுப்பினரும், பெரிய வர்த்தகரும், மவ்பிம மற்றும் சிலோன் டுடே செய்திப் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளருமாவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com