Sunday, September 9, 2012

வடக்குத் தேர்தல் விரைவில் – மகிந்த ராஜபக்ஷ

வடக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும், கிழக்கு, வடமத்திய மற்றும் சபரகமுவை மாகாண தேர்தலை நடத்தியமை, இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதை உலகுக்கு காட்டும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

8ம் திகதி சபாநாயகரின் உத்தியோகபூர்வ வதிவிடத்தில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான ஊடக கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

அத்துடன், தான் எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையோ, ஊர்வலத்தையோ தடுக்கப் போவதில்லை என்றும், ஆனால் வன்முறையையும், பொது மக்களுக்கும், உடமைகளுக்கும் சேதம் விளைவிப்பதை அனுமதிக்கப் போவதில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com