Friday, September 14, 2012

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அநுர புத்திக கைது

வடமத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அநுர புத்தி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் றோஹன தெரிவித்துள்ளார்.

இனந்தெரியாத நபர்கள் மிஹிந்தலை பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளளார். இச்சம்பவத்திற்கும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் அநுர புத்திக்கவிற்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து புத்திக்க கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com