Friday, September 14, 2012

த.தே.கூட்டமைப்பால் பணிகள் தாமதமடைகின்றன! ரொபர்ட் பிளேக்கிடம் நிமால் தெரிவிப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் குறித்து, இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது. இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளாததன் காரணமாகவே, அதன் பணிகள் தாமதமாகி வருகின்றன என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பிரதிநிதிகளை இன்று நியமித்தால் தெரிவுக்குழுவின் பணிகளை நாளை முதல் ஆரம்பிக்க முடிவும் எனவும், அமைச்சர் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வடமாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகள் மீள்குடியேற்றம் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷேசல் சீசனும் கலந்துக்கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com