மட்டக்களப்பு ஊறணிப்பகுதியில் உள்ள வாவியிலிருந்து பெண்ணிண் சடலம் மீட்பு
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் ஊறணிப்பகுதியில் உள்ள வாவி ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமென்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, ஞானசூரியம் சதுக்கத்தை சேர்ந்த லக்ஷ்மி (52வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் கணவரிடம் இருந்து விவாகரத்துப்பெற்று தனிமையில் வசித்து வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment