13 ஐ நடைமுறைப்படுத்துங்கள், பொலிஸ் அதிகாரங்களை பிறகு தாருங்கள் - EPDP
மாகாண சபைகள் அதிக அதிகாரங் களுடன் செயல்படுவதற்கு 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குதலை ஆரம்பிக்க வேண்டும் என்றும், உரிய சந்தர்ப்பம் வரும் வரைக்கும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்குவதைக் கைவிட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி.தெரிவித்துள்ளது.
சகல மக்களினதும் பொதுவான சட்ட, மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒவ்வொருவரும் ஜனநாயக முறையில் தங்களது கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும் உரிமை உட்பட, சமூகம் சுதந்திரமாக செயல்படுவதற்கு அடித்தளத்தை அமைத்து, பயணத்தை நிறைவு செய்வதற்கு அரசு உட்பட சகல தரப்பினரும் எழுச்சி கொள்ள வேண்டுமென என மேலும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment