Wednesday, February 29, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரிதமாக செயற்படுத்துங்கள்.

காதினல் ரஞ்ஜித் ஆண்டகை அரசாங்கத்திற்கு அவசர வேண்டுகோள்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை அமர்வில்  இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையானது நாட்டினுடைய சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற பிரதான  கூறான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மிகத் துரிதமாக செயற்படுத்தமாறு காதினல் ரஞ்ஜித் ஆண்டகை அரசாங்கத்திற்கு அவரச வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மித உரிமை பேரவையில் அமெரிக்காவின் மூலம் இலங்கைக்கு எதிராக பிரேரணையை முன்வைப்பதற்கு அவர்களுக்கு இன்னும் சில மேற்குலக நாடுகள் ஆதரவு அளிக்கவுள்ளன. இது எங்களுடைய நாட்டின் சுதந்திரத்திற்கும் மற்றும் சுயாதீனத்திற்கும் இடையூறாக அமையும். இதனை நாம் புத்திசாலித்தானமாக செயற்படுத்த வேண்டும்.

எனவே, இதற்கு பதில் அளிக்கக் கூடியதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரித கதியில் செயற்படுத்தப்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com