Wednesday, February 1, 2012

வடமராட்சி கிழக்கில் உப்பு மற்றும் கருவாட்டிற்கு இரண்டு ஆலைகள் அமைக்கப்படவுள்ளது

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்களின் சமாசத்திற்கு ஜ.ஓ.எம் நிறுவன நிதியுதவியுடன் உப்பு அரைக்கும் ஆலை மற்றும் மற்றும் கருவாடு பொதி செய்யும் கட்டடம் என்பன அமைக்கப்படவுள்ளன.

இதற்கான ஒப்பந்தத்தில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்களின் சமாசப்பிரதிநிதிகளும் ஜ.ஓ.எம் நிறுவன பிரதிநிதிகளும் கடந்த வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டுள்ளனர்.

உப்பு அரைக்கும் ஆலை மற்றும் மற்றும் கருவாடு பொதி செய்யும் கட்டடம் ஆகியன 2 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.

இங்கு பெண்களைத் தலைமைத்துவமாகக்கொண்ட 32 குடும்பங்களுக்கு கருவாடு பதனிடுவதற்கு தலா 10 ஆயிரமும் சுழற்சிக்கடனாக வழங்க ஜ.ஓ.எம் நிறுவனம் முன்வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com