Monday, January 2, 2012

பாதாள உலகத் தலைவர் கடத்தப்பட்டு கொலை

பாதாள உலகத் தலைவர் என்று கூறப்படும் தாபரே இனந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை சேய்யப்பட்டுள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். எதிர்தரப்பு பாதாள குழுவினரால் இவர் வானொன்றில் கடத்தி செல்லப்பட்டு தலவத்துகொட பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பின்னர் இவரது சடலம் கிம்புலா எல - எக்கமுத்து வீதி அருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒரு வருட காலமாக விளக்க மறியலில் வைக்கப்பட்டு அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com