Monday, January 2, 2012

சிலி நாட்டின் காட்டுத்தீயில் 11 ஹெக்டயர் வனப்பூங்கா எரிந்து நாசம்.

நாசகாரி என சந்தேகிக்கப்படும் இஸ்ரேலிய உல்லாசப்பயணி கைது.

சிலி நாட்டின் டொரெஸ் டி செய்ன் வனப்பூங்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 11 ஹெக்டயர் நிலப்பரப்பு அழிந்துள்ளது. இக்காட்டு தீயை அணைப்பதற்காக 500 இற்கு மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

காட்டுத்தீ ஏற்பட்டதையடுத்து இப்பகுதிக்கு வருகை தந்த 400 இற்கும் மேற்பட்ட உல்லாச பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த காட்டு தீ தொடர்பில் இஸ்ரேலிய உல்லாச பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். சிலி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காட்டுத்தீ ஏற்பட்ட பிரதேசத்தில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com